தருமபுரி, மே 26 –
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். காந்திநகர் பகுதியில் சந்தேகப்படும் வகையில் கையில் பிளாஸ்டிக் பையுடன் நின்றிருந்த நபர் காவல் துறையினரை பார்த்தவுடன் தப்பியோட முயன்றார். அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர் அதே பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (26) என்பதும் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதே போல் பெல்ரம்பட்டி பகுதியைச் சேர்ந்த லீனா (27), ஈச்சம்பள்ளம் பகுதியில் விஜய் (23) ஆகியோர் மது பாட்டில்களை விற்பதாக காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


