கிருஷ்ணகிரி, டிசம்பர் 06 –
தமிழக அரசு பள்ளி கல்லூரிகளில் பயின்று அரசு தங்கும் விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று 20 அரசு தங்கும் விடுதிகளில் தங்கி உள்ள 500 கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிலம்பம் பயிற்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர்: தமிழகத்தில் முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 20 அரசு விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டதாக கூறினார். மேலும்., தற்காற்பு கலையினை முன்னெடுத்து, மாணவர்கள் குறிப்பாக மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பயிற்சியினை மூலமாக மாணவர்களுக்கு சிலம்பம் குறித்த ஆர்வம் ஏற்படுவதுடன் உடல் ஆரோக்கியம் மேம்படும், சிலம்பம் நன்கு கற்றுக் கொண்டு மாநிலம் மற்றும் தேசிய அளவில் சிறந்த வீரராக வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அரசு விடுதி மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி வழங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குரு ராகவேந்திரன், கவுரி சங்கர், மாரியப்பன் ஆகிய மூன்று பயிற்சியாளர்கள் நியமிக்க பட்டுள்ளனர். இந்த பயிற்சியாளர் களுக்கு பயிற்சிக்கான ஆணையினை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல துறை அலுவலர் பிரேமலதா, கலை பண்பாட்டு துறை மண்டல அலுவலர் சங்கரராமன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.



