நாகர்கோவில், மே 25 –
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் பகுதியில் உள்ள பூங்கா நகரை சேர்ந்த நாகர்கோவில் மாநகராட்சி ஓட்டுநரான செந்தில்குமார் (36). அவரது மனைவி சுமிதா (33) குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சஜின் (14) மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி சுமிதா கடந்த நான்கு மாதத்துக்கு முன்பு கணவனை விட்டுப் பிரிந்து சுமிதாவின் தாயார் வீட்டிலும் கணவர் மற்றும் அவரது மகன் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அவரது மனைவி சுமிதா நேற்று கணவரை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த அவரது மகன் சஜினை நண்பர்களுடன் சென்று விளையாடிவிட்டு வருமாறு அனுப்பி வைத்துள்ளனர். வீட்டை விட்டு வெளியே சென்ற சுஜின் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் சஜின் தாய் தந்தையார் தகராறு செய்ததில் ஆத்திரத்தில் செந்தில்குமார் அவரது மனைவி சுமிதாவை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு அவரும் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த தாயைப் பார்த்த அவரது மகன் சஜின் திகைத்துப் போனார்.
உடனடியாக அவர் உறவினருக்கு தகவல் கொடுக்க உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரல்வாய்மொழி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவியை கத்தியால் குத்திக் கொண்டு விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



