குளச்சல், டிச. 1 –
மணவாளக்குறிச்சி அருகே கண்டர் விளாகம் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் என்பவர் மகன் ஜிபின் (20). வெள்ளமோடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவ தினம் இவர் கூட்டுமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்றார். அப்போது தலக்குலம் பகுதியை சேர்ந்த ஸ்ரீ லட்சுமி (24) என்பவர் ஓட்டி வந்த பைக் எதிர்பாராத விதமாக மாணவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெபின் படுகாயம் அடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடையார் விளைப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


