திருச்சி, ஏப்ரல் 25 –
திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே காரணிப்பட்டி கிராமத்தில், குடும்பப் பிரச்சனை காரணமாக காவியா (30) என்பவர் நேற்று (ஏப்ரல் 24) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
வளநாடு போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



