நாகர்கோவில், அக். 28 –
நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா பல்வேறு நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
நாகர்கோவில் அருகே சுங்கான்கடையில் அமைந்துள்ள நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை கடந்த 2024 செப்டம்பர் 20 -ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. 35க்கும் மேற்பட்ட சிறப்புப் பிரிவுகளில், 75-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், நவீன தொழில்நுட்பங்களுடன் சேவையாற்றி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாது திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது.
ஒரே ஆண்டில், கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில் மருத்துவமனையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளிநோயாளி சேவையின் மூலம் சிகிச்சை பெற்றுள்ளனர். 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவ சேவையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கிம்ஸ் ஹெல்த் குழுமத் தலைவர் டாக்டர் எம்.ஐ. சஹதுல்லா தலைமையில் நடைபெற்றது. இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன், தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் ஆகியோர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டனர்.
திரைப்பட நடிகை டாக்டர் ஐஸ்வர்யா லக்ஷ்மி, குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. திரு.பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் மகேஷ், வில்லுகுறி பேரூராட்சி தலைவர் விஜயலெக்ஷ்மி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிம்ஸ் ஹெல்த் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு. நஜீப் வரவேற்புரை நிகழ்த்தினார். நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் தாணுசுப்பிரமணியம் நன்றி கூறினார்.
கிம்ஸ் ஹெல்த் நிறுவனத்தின் தொடர்ச்சியான சமூகப் பொறுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 8 இலவச செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. மேலும் உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு பிரிவு தொடங்கப்பட்டது. அத்துடன், கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சைக்கான லினாக் யூனிட், இதயம் மற்றும் நரம்பு தொடர்பான சிகிச்சைக்கான கேத் லேப், எம்.ஆர்.ஐ. மற்றும் மாமோகிராம் ( மார்பக புற்று நோயை கண்டுபிடிக்கும் கருவி), பல உறுப்பு மாற்று பிரிவு ஆகிய புதிய நவீன உபகரணங்கள் திறந்து வைக்கப்பட்டன.
இதில் 300க்கும் மேற்பட்ட முக்கிய விருந்தினர்கள், அரசியல்வாதிகள், ஊடகப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்கள், கிம்ஸ் திருவனந்தபுரம் மூத்த மேலாண்மை குழுவினர் மற்றும் 500க்கும் மேற்பட்ட கிம்ஸ் நாகர்கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ரூபா ரேவதி குழுவினரின் வயலின் இசை மற்றும் இரவு விருந்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.



