மார்த்தாண்டம், டிச. 12 –
நட்டாலம் அருகே கொல்லஞ்சி பகுதியை சேர்ந்தவர்கள் அஜித் (32,) ஜெபின் (30). இரண்டு பேரும் அண்ணன் தம்பியாவர்கள். இதில் அஜித் நட்டாலம் பகுதியில் பன்றி பண்ண வைத்துள்ளதாக தெரிகிறது. அதே பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் (41). கூலி தொழிலாளி. இவர் பன்றி பண்ணையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், பண்ணையை சுத்தமாக வைக்குமாறு ஷாஜகான், அஜித்திடம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவ தினம் அஜித், ஜெபின் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஷாஜகான், விஜயகுமார் ஆகியோர் சேர்ந்து தகராறு செய்தனர். ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே இருதரப்பினரும் கம்பு கைகளால் தாக்கிக் கொண்டனர். இதில் 4 பேரும் காயமடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் ஷாஜகான், விஜயகுமார், அஜித், ஜெபின் ஆகிய மீது நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


