தருமபுரி, ஜூலை 23 –
தருமபுரி மாவட்டம் கொளத்தூரில் உள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோயில் 10ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் கணபதி பூஜை உடன் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இதை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து அம்மை வேள்வி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் கொளத்தூர் விநாயகர் கோவிலிருந்து ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்து அடைந்தது. அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம், திருக்குட நீராட்டு, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். திருக்கோவில் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.



