திருப்பூர், ஜூலை 07 –
நாம் தினசரி பயன்படுத்தும் சாலைகளில் பாதுகாப்பாக செல்வது பற்றியும் மாணவர்கள் அனைத்து போக்குவரத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும் என்பது பற்றியும் அவர்களுக்கு விரிவாக எடுத்து சொல்லப்பட்டது. மாணவர்களின் லட்சியங்கள் கொள்கைகள் கல்வி மூலம் தொழில்கள் வேலை வாய்ப்பு பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் அதற்கு முதலில் நாம் உடலில் உயிர் இருக்க வேண்டும் நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்காக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருப்பூர் மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையாளர் ஏ. சேகர், வடக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் எஸ்.ஆர்.ரமேஷ், ஏ.வி.பி. பேராசிரியர் தீபிகா அவிநாசி சாலையில்
தனியார் ஹோட்டல் முன்பு 300க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.



