கிருஷ்ணகிரி, ஜூன் 8 –
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் P.முகுந்தன் MLA பிறப்பித்த உத்தரவின்படி, கழக தலைமையின் அறிவுறுத்தலின் படி, கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட கழக செயலாளர் G.சுரேஷ் ஆலோசனையின் படி, கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட நகர கழக செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் M.சசிகுமார் தலைமையில், கோடை வெயிலில் பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில், கிருஷ்ணகிரி நகரத்திற்குட்பட்ட ஓல்டு ஹௌசிங் போர்டு எதிரில் லண்டன் பேட்டை கழக நிர்வாகிகள் சார்பாக, “தண்ணீர் பந்தல்” ஒன்றினைத் திறந்து வைத்து, இந்த நிகழ்வில் வெயிலால் வாடி வந்த பொதுமக்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் பழச்சாறுகள், ஜூஸ், மோர், வாழைப்பழங்கள் மற்றும் தர்பூசணி போன்ற குளுமையான பழங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.



