மத்தூர், மே 18 –
முன்னாள் இந்திய பிரதமர் அமரர் ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை (மே 21) முன்னிட்டு, கர்நாடக மாநில தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஆண்டுதோறும் பெங்களூரில் இருந்து துவங்கும் இந்த ஜோதி பயணமானது, கேரளா மாநிலங்கள் வழியாக கன்னியாகுமரி மாவட்டத்தை வந்தடைகிறது.
அங்கிருந்து நாகர்கோவில், நெல்லை, விருதுநகர், மதுரை, திருச்சி, கோவை செங்கல்பட்டு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை வழியாக ஸ்ரீபெரும்புதூரை செல்கிறது. இதன் முன்னதாக ஜோதி யாத்திரை குழுத்தலைவர் துரை வேலு தலைமையில், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் மத்தூர் பேருந்து நிலையம் வருகை தந்த இந்திய தேசத்தின் முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தியின் 35வது ஆண்டு நினைவு தின ஜோதி யாத்திரை வருகை தந்தது. அப்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி.ரகு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பெரும் திரளாகக் கன்டு ராஜீவ் ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போச்சம்பள்ளியில் அமைந்துள்ள அமரர் ராஜீவ் காந்தி, மத்தூரில் அமைந்துள்ள அன்னை இந்திரா காந்தி, பெருந்தலைவர் காமராஜார் ஆகிய திரு உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் இந்த ஜோதியானது போச்சம்பள்ளியில் இருந்து துவங்கிய ஜோதி மத்தூர், ஓலைப்பட்டி, சாம்பல்பட்டி ஊத்தங்கரை வழியாக வருகின்ற 21ம் தேதி ஸ்ரீபெரும்பத்தூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்ததை பெற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட பொதுசெயலாளர் மனோகரன், மாவட்ட துணைத் தலைவர் மடத்தானூர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லோகநாதன், ஆசிரியர் கோகுல், குமரி நவாப், சபாபதி, நேரு, மாரியப்பன்,
அர்சூனன் உள்ளிட்ட காங்கிரஸ் கடசியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.



