By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் 10 வயது சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் 10 வயது சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி கைது
குற்றம்கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் 10 வயது சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி கைது

Last updated: May 23, 2026 6:21 pm
May 23, 2026
20 Views
Share
SHARE

கோவை, மே 23 –

கடந்த 21.05.2026 அன்று இரவு சுமார் 08.30 மணி அளவில், கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளபாளையம், பாரதிபுரம், அருணகிரிநாதர் வீதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி மாலை சுமார் 05.00 மணி அளவில் காணாமல் போனதாக காவல் அவசர உதவி எண் 100 மூலம் தகவல் கிடைக்கப்பெற்றது. தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு புகார் பெற்று அதே இரவு சுமார் 10.00 மணியளவில் குழந்தை காணாமல் போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கருமத்தம்பட்டி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு காணாமல் போன சிறுமியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையின் போது சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி (33), சிறுமியின் குடும்பத்திற்கு பழக்கமான அண்டை வீட்டுக்காரர் சிறுமியை அழைத்துச் சென்றது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள மரியா ரோஸ் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் பதுங்கியிருந்த குற்றவாளி கார்த்தியை காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். அப்போது காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க முயன்ற அவர் மேல்மாடியில் இருந்து குதித்ததில், அவரது வலது கை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், குற்றவாளி கார்த்தி சிறுமியை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கண்ணம்பாளையம் குளம் அருகிலுள்ள தென்னைத் தோட்டத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் நடைபெற்ற விசாரணையில், பாரதிபுரம்,பள்ளபாளையத்தை சேர்ந்த மோகன்(30) என்பவர், முக்கிய குற்றவாளிக்கு உறுதுணையாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கார்த்தி தற்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வழக்கு சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை கொடர்புடையது என்பதால், வழக்கில் போக்சோ சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல் தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் மேற்கொண்ட துரிதமான நடவடிக்கை மற்றும் காவல்துறையின் தயார்நிலை காரணமாக 24 மணி நேரத்திற்குள் வழக்கு கண்டறியப்பட்டு வழக்கின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு விரைவாக அரசின் நிவாரண உதவித் தொகை கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விளம்பரம்

You Might Also Like

தேமுதிக திமுகவுடன் இணைந்ததை அடுத்து கிருஷ்ணகிரியில் தேமுதிகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
மன்னர் பரம்பரை என நினைப்பவர்கள் ஆட்சி வேண்டாம்; அதிமுகவுக்கு வாய்ப்பு தாருங்கள்: எடப்பாடி பழனிச்சாமி ஆரல்வாய்மொழியில் பரப்புரை
உணவு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
அரசு ரப்பர் கழக நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத செயலுக்கு நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் கண்டனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

ஸ்ரீ பரம்ஜோதி ஆரோக்கிய சோம வரம் நிகழ்ச்சி

January 10, 2025
41 Views
ஜி..வி. சம்பத் மகன் நிதின் சம்பத் அபிராமி திருமண வரவேற்பு விழா
கத்தியை வாங்க தம்பி எடுத்த முயற்சியால் பரிதாபமாக பரிபோன உயிர்
மத்திய அரசு கல்விக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறது – அன்பில் மகேஷ்
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account