பூதப்பாண்டி, மே 25 –
பூதப்பாண்டி வட்டார வளர்ச்சி அலுவலரை இந்திய தேசிய காங்கிரஸ் தோவாளை வட்டார காங்கிரஸ் (மேற்கு) தலைவர் நாஞ்சில் M.செல்வராஜ் சந்தித்து காட்டுப்புதூர் ஊராட்சி சி-எஸ்-ஐ சர்ச் முதல் செட்டிபனை இறக்கம் வரை-காற்றாடிவிளை பேருந்து திரும்பும் இடத்திலிருந்து மேற்கு சுடுகாடு வரை பழுதடைந்த சாலையை சரிசெய்து தார்சாலை அமைத்து தர கேட்டு மனு ஒன்றை அழித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், காட்டுப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிஎஸ்ஐ தேவாலயம் முதல் செட்டிபனை இறக்கம் வரையும், காற்றாடிவிளை பேருந்து திரும்பும் இடத்திலிருந்து மேற்கு சுடுகாடு வரை சாலைகள் பழுதடைந்து பொதுமக்கள் செல்வதற்கும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக, மோசமான நிலையில் உள்ளது.
மேலும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தற்போது பள்ளி கல்லூரி கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பதால் இவ்வழியே மாணவ மாணவிகள் செல்வதற்கு இடையூறாகவும் உள்ளதால் தாங்கள் பார்வையிட்டு பழுதடைந்த சாலையை சரி செய்து தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.



