கிருஷ்ணகிரி, ஜூன் 21 –
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் பெருகோப்பனபள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பெருகோப்பனப்பள்ளி ஊராட்சியில் ரூபாய் 53,92,956 இலட்சம் மதிப்பீட்டிலும், ஜெகதேவி ஊராட்சியில் ரூபாய் 56,60,168 மதிப்பீட்டில், அஞ்சூர் ஊராட்சியில் ரூபாய் 60,75,010 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜையை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் கலந்துகொண்டு பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், முருகன், ஒன்றிய செயலாளர்கள் அறிஞர், வி.ஜி. ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி நாகராஜ், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பாலாஜி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முரளி, ஜெகதேவி ஊராட்சி செயலாளர் செங்கதிர் செல்வன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.