கிருஷ்ணகிரி, டிச. 2 –
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள மல்லப்பாடி நாடார் கொட்டாய் வெங்கடாபுரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய மல்லப்பாடி ஊராட்சியில் தொடர்ந்து சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருபவர் சசிகுமார். கிராம மக்களிடையே அதிகார தோரணையில் மக்களை மிரட்டும் விதமாகவும் பேசி வருவதாகவும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் கிராம மக்கள் குற்றச்சாட்டி பத்துக்கும் மேற்பட்டோர் இன்று ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கிராமங்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தராத ஊராட்சி செயலாளரை கண்டித்தும் கிராம மக்களை அவமரியாதைப்படுத்தும் ஊராட்சி செயலாளரை கண்டித்தும் இன்று அலுவலகம் முன்பு பத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 25 ஆண்டுகளாக ஒரே ஊராட்சியில் பணியாற்றியதால் தான் இது போல அராஜகப் போக்கில் ஈடுபடுவதாகவும் கிராம மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
ஊராட்சி செயலாளர் மாற்றக்கோரி பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர் எனவே மாவட்ட ஆட்சியர் உரிய ஆய்வு செய்து ஊராட்சி செயலாளரை உடனடியாக வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். தகவல் அறிந்து வந்த பர்கூர் காவல் துறையினர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.



