மதுரை, ஜூலை 17 –
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அந்த வகையில் மதுரை புதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அடுத்த கட்ட நடவடிக்கையாக சென்னையில் மிகப்பெரிய அளவில் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் திரட்டி பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக தெரிவித்தனர்.



