By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் சிறையில் வியாபாரி அடித்துக் கொலை: 3 சிறை பணியாளர்கள், 8 விசாரணை கைதிகள் மீது வழக்கு பதிவு: உடலை வாங்க மறுத்து 3ம் நாளாக உறவினர்கள் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கள்ளக்குறிச்சி > நாகர்கோவில் சிறையில் வியாபாரி அடித்துக் கொலை: 3 சிறை பணியாளர்கள், 8 விசாரணை கைதிகள் மீது வழக்கு பதிவு: உடலை வாங்க மறுத்து 3ம் நாளாக உறவினர்கள் போராட்டம்
கள்ளக்குறிச்சிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் சிறையில் வியாபாரி அடித்துக் கொலை: 3 சிறை பணியாளர்கள், 8 விசாரணை கைதிகள் மீது வழக்கு பதிவு: உடலை வாங்க மறுத்து 3ம் நாளாக உறவினர்கள் போராட்டம்

Last updated: July 15, 2026 6:52 pm
July 15, 2026
7 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 15 –

குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் ஈத்தன்காடு பகுதியை சேர்ந்தவர் சபரி வர்மன் (34). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இதற்கிடையில் கடையில் குட்கா புகையிலை விற்றதாக தென்தாமரைகுளம் போலீசார் சபரி வர்மனை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் 12-ம் தேதி காலையில் சபரி வர்மன் மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறி, அவரை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனக்கு கொண்டு சென்றனர். அங்கு சபரிவர்மன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை அடுத்து சபரி வர்மன் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் குமரி மாவட்ட போலீஸ் எஸ் பி ஸ்டாலின், சிறைத்துறை எஸ் பி செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் சிறையில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறையில் வைத்து சபரி வர்மன் தாக்கப்பட்டு இருப்பது உறுதியானது. நேற்று சபரி வர்மனின் உடல் நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்தது. இதில் சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து நீதிபதி சிறையில் விசாரணை மேற்கொண்டார்.

இந்த விசாரணையின் போது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கடந்த 12ஆம் தேதி இரவு சிறைக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து உயிரிழந்த சபரி வர்மன் சிறைத்துறை பணியாளர்களால் தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.தொடர்ந்து நேற்று இரவு நேசமணி நகர் போலீசார் சிறை காவலர் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், சிறை காவலர் சிவக்குமார் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், சபரி வர்மன் சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து உணவு சாப்பிடாமல் விரக்தியில் இருந்துள்ளார். வீட்டுக்கு சென்று குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று சத்தம் போட்டு உள்ளார். இதனால் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மற்ற கைதிகளுக்கும் சபரி வர்மனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கைதிகள் வார்டனிடம் புகார் செய்துள்ளனர். வார்டன்கள் தாக்கிய பின் கைதிகளும் இணைந்து சபரிவர்மனை தாக்கி உள்ளனர். இது தொடர்பாக சிறையில் உள்ள கைதிகள் விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், பெருமாள், சேதுராம், அஜித், அரவிந்து ஆகிய 8 பேர் மீது நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சபரிவர்மன் உடல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் பலமுறை சபரி வர்மனின் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. இதற்கு இடையே சபரி வர்மன் மனைவியின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் அரசு வேலை வழங்க வேண்டும். கலெக்டர் இதற்கான உறுதியை கொடுக்க வேண்டும். அப்போதுதான் சபரி வர்மன் உடலை வாங்குவோம் என்று அவரது உறவினர்கள் கூறி வருகின்றனர். இதற்கு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக இன்று சபரி வர்மனின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முதல் தேர்தலிலேயே திமுக கோட்டையாக விளங்கிய தஞ்சாவூர் தொகுதியை வசப்படுத்திய தவெக
தேசிய பேட்மின்டன் போட்டியில் குமரி பெண் தலைமை காவலருக்கு பதக்கம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மத்திய மாவட்ட தவெக செயலாளர் ராஜபிரகாஷ் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே நீதிமன்ற உத்தரவை மீறி வழிபாட்டு கூடம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணி உள்ளிருப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் 43 சேமிப்பு கிடங்குகள் தயார்: 1.50 லட்சம் டன் நெல் சேமிக்க இட வசதி: குறுவை , சம்பா பருவத்தில் 8.81 லட்சம் டன் முதல் கொள்முதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

பேருந்து வசதியே இல்லாத ஊருக்கு அரசு பஸ் இயக்கம்

December 24, 2024
103 Views
குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் திமுக அரசின் சாதனைகளை நூதன முறையில் பிரச்சாரம்
கருங்கலில் வாலிபர்களை காரில் வழிமறித்து தாக்குதல்
தென்காசியில் தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பத்திரிக்கையாளர் சந்திப்பு
மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account