நாகர்கோவில், மே 20 –
அகில இந்திய காவல்துறையின் தேசிய பேட்மிண்டன் தொடர் – 2026. போட்டிகள் மே 9 முதல் மே 13 வரை, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பிபிடி பேட்மிண்டன் அகாதமியில் வைத்து நடைபெற்றது.
இந்த பேட்மிண்டன் விளையாட்டுப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து, ஆயுதப்படை பெண் தலைமை காவலர் ஜீவா என்பவர் 35 வயதிற்கு மேற்பட்டோருக்கான பேட்மிண்டன் போட்டி பிரிவில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசினை பெற்றுள்ளார்.
தேசிய அளவில் குமரி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த பெண் தலைமை காவலர் ஜீவாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.



