By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு; நாற்று நட்டு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு; நாற்று நட்டு போராட்டம்
கனஂனியாகுமரி

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு; நாற்று நட்டு போராட்டம்

Last updated: July 26, 2025 10:19 am
July 26, 2025
28 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 26 –

நாகர்கோவிலில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் அழகுமீனா தலைமை வகித்தார். வேளாண் இணை ஆணையர் ஜென்கின் பிரபாகர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வசந்தி, ஆர்டிஓ காளீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் பேசுகையில், அரசு அதிகாரிகள் வேளாண் துறையில் அக்கறை செலுத்த வேண்டும். கடந்த 2023-ம் ஆண்டில் பி.பி. சானலில் உடைப்பு ஏற்பட்டதால் கும்பப்பூ சாகுபடி பாதிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டில் தோவாளை சேனலில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக கன்னிப்பூ சாகுபடி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டில் அனந்தனார் சானலில் உள்ளிமலை கால்வாய் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக 110 நாட்கள் கொண்ட பயிர்களுக்கு உரிய தண்ணீர் செல்லவில்லை. இதனால் குமரியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு மகசூல் குறைந்தது. எனவே நஷ்டத்தை சந்தித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

வேளாண் அதிகாரிகள் வருடம் தோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கால்வாய்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக பயிர் சாகுபடிக்கு அணைகளில் தண்ணீர் திறக்கும் நேரத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லவில்லை. இது அதிகாரிகள் தெரிந்தே செய்வது போன்று தோன்றுகிறது. மேலும் குமரி மாவட்டத்தில் கடந்த 1955ம் ஆண்டு 56 ஆயிரம் ஹெக்டேராக இருந்த விளை நிலங்கள் தற்போது வெறும் 6 ஆயிரம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இதற்கு விளை நிலங்களை வீட்டுமனைகளுக்கு அனுமதி அளித்தது காரணம் என விவசாயிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைத்து பேசினர்.

ஒரு கட்டத்தில் கோபமடைந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேளாண் அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டவாறு திடீரென கூடத்தில் இருந்து வெளியேறி வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவாயில் பகுதியில் தேங்கி நின்ற தண்ணீரில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

10ம் வகுப்பு மாணவி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
வடசேரி பஸ் நிலையத்தில் நடமாடும் வியாபாரிகளுக்கு மீண்டும் அனுமதி
விரிகோடு பகுதியில் மக்கள் விரும்பும் இடத்தில் ரயில்வே மேம்பாலம்; எம்.பி, எம்எல்ஏ வலியுறுத்தல்
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் ஆவணி திருவிழா
சோழன் திட்டை பழைய ஆற்றில் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மயிலாடி அருகே கூண்டு பாலத்தின் தரைப்பகுதியில் போதிய வடிகால் வசதி இன்றி சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

August 6, 2025
26 Views
சூலூரில் திமுகவினர் அல்வா கொடுக்கும் போராட்டம்
பரமக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலாவதியான மாத்திரைகள் விநியோகமா.?
மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மாைனம்
ஆம்புலன்ஸ் சேவையை திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account