தென்காசியில் 9 மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் டி. கே.பாண்டியன் தலைமை வகித்தார், மாவட்ட பொதுச் செயலாளர் செய்யது இப்ராஹிம் வரவேற்புரை ஆற்றினார், மாவட்ட துணை தலைவர் அன்பு ராணி, சங்கரன்கோவில் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் வேல்சாமி பாண்டியன், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், தென்காசி மாவட்ட கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 9 மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவிக்காலம் 2026 அக்டோபர் மாதம் வரை உள்ளதாக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும், ஊராட்சிகளில் நிதி இல்லாத ஊராட்சிகளுக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ரூ.5 லட்சம் வரை வரவு வைக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களான குறும்பலாபேரி முத்துமாலையம்மாள், வயலி கருணாநிதி, கீழக்கடையம் பூமிநாத், பொட்டல்புதூர் கணேசன், கிளாங்காடு சந்திரசேகரன், வல்லம் ஜமீன் பாத்திமா, மத்தளம் பாறை மைதிலி, தெற்கு கடையம் முத்துலட்சுமி, கற்குடி முத்துப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



