மார்த்தாண்டம், டிச. 6 –
நித்திரவிளை அருகே முக்காட்டு விளைபகுதியை சேர்ந்தவர் சரிதா (46). இவருக்கும் அதே பகுதி சொர்ணம்மாள் என்பவர்களிடையே சொத்து சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவதினம் சரிதா தனது தாயார் சந்திரிகா (74) என்பவருடன் அந்த பகுதியில் நடைபெறும் கட்டுமான பணியை பார்வையிட்டுக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த சொர்ணம்மாள் அவரது மகள் லீலா ஆகியோர் சேர்ந்து சந்திரிகாவை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த சந்திரிகா குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மகள் சரிதா அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் சொர்ணம்மாள் மற்றும் லீலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


