குளச்சல், மே 18 –
மணவாளக்குறிச்சி அருகே கல்படி பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் மனைவி கனகாபாய் (54). இவர் நாகர்கோவில் கோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். சம்பவ தினம் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல பஸ்ஸில் ஏறியுள்ளார். பின்னர் திருநயினார் குறிச்சி சந்திப்பில் பஸ்ஸில் இருந்து இறங்கி தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
மூங்கில்விளை என்ற பகுதியில் செல்லும் போது அவருக்கு பின்னால் அதி வேகமாக வந்த பைக் ஒன்று அவர் மீது மோதியது. இதில் கனக பாய் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து கனகபாய் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் பைக் விபத்திற்கு காரணமான திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த ஷைஜு என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


