தருமபுரி, மே 23 –
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின்படி காவல்துறையினர் மாவட்ட முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள், பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்களை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இதன்படி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்தவர்கள், பொது இடங்களில் தகராறில் ஈடுபட்டவர்கள் என மொத்தம் 18 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர். மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, போதை பொருட்கள் கடத்தல் உள்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.


