தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் நேர்காணல் முகாமில் ரூபாய் 1 கோடியே 55 இலட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் 293 பேருக்கு நலத்திட்ட உதவிகளை
மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்
தஞ்சாவூர்.மார்ச் 21
தஞ்சாவூர் அருகே உள்ள மருங்குளம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலை வகித்தார் முகாமில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஊதியம் ஓய்வூதியம், விதவை பெண்கள் ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வூதிய தொகை 40 பேருக்கு ரூபாய் 5 லட்சத்து 96 ஆயிரத்து 750 மதிப்பில் வழங்கப்பட்டது.
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் புதிய குடும்ப அட்டை 4 பேருக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாய பயன்பாட்டு பொருள்கள் ரூபாய் 10 லட்சத்து 50 மதிப்பில் 6 பேருக்கும் வழங்கப்பட்டது
தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் தொகை சார்பில் விவசாய பயன்பாட்டு பொருள்கள் ரூபாய் 34 ஆயிரத்து 939 மதிப்பில் 3 பேருக்கும், மகளிர் திட்டத்தின் கீழ் வங்கி கடன் இணைப்பு ரூபாய் 52 லட்சம் மதிப்பில் 11 குழுக்களுக்கும், சிஐஎப் சமூக முதலீட்டு நிறுவனம் ரூபாய் 8 லட்சம் மதிப்பில் 140 பேருக்கும், வருவாய் துறை சார்பில் முதல்- அமைச்சரின் விபத்து நிவாரணம் ரூபாய் 83 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 86 பேருக்கும், மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூபாய் 6 லட்சம் மதிப்பில் 3 பேருக் கும் வழங்கப்பட்டது
முகாமில் மொத்தம் ரூபாய்1 கோடியே 55 லட்சத்து 9 1ஆயிரத்து 739 மதிப்பில் 293 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கி, பேசினார்
அப்போது அவர் கூறியதாவது:
மக்கள் நேர்காணல் முகாமில் தரப்படுகின்ற கோரிக்கை மனுக் களுக்கு உடனடியாக தீர்வு காணப் படுகிறது. பள்ளி கல்வித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட துறைகள் மூலமாக அரசு செயல் படுத்தும் நலத்திட்டங்களால் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்கிறது என்றார்.
முகாமில் முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் அறிவுடை செல்வன் அருளானந்த சாமி, சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆட்சியர் சங்கர், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்



