பரமக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பணியாளர்களின்
அலட்சியம் உயிர்பலி அச்சத்தில் நோயாளிகள் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
பரமக்குடி தாலுகா மருத்துவமனை ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூரி ஆக மாற்றப்பட்டதால், பரமக்குடி தாலுகா மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்கு புதிதாக 5 மாடிகளை கொண்ட கட்டிடம் கட்டும் பணிகள் தொய்வு நிலையில் நடந்த பொழுது, ஆய்வுக்கு வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரிகளை அழைத்து கடுமையான எச்சரிக்கை விடுத்து, ஒப்பந்ததாரிடம் போனில் உன்னுடைய ஒப்பந்தத்தை நீக்கி விடுவேன், உடனடியாக பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என கடும் எச்சரிக்கை விட்டதுடன் மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் சிடி ஸ்கேன் ஆபரேட்டர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்து சென்றார். இந்த நிலையில், தொடர்ந்து மருத்துவமனையில் சில மருத்துவங்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அக்கறையில்லாமல் பேரளவில் செயல்படுவதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் நேற்று சிடி ஸ்கேன் எடுக்க சுமார் 20க்கும் மேற்பட்டோர் காத்திருந்த நிலையில்,காலை 8 மணி பணிக்கு வர வேண்டிய சிடி ஸ்கேன் ஆப்ரேட்டர் 10 மணி வரை வராததால் ஸ்கேன் எடுப்பதற்காக நோயாளிகள் காத்திருந்தனர்.
மருத்துவமனை மருத்துவ அதிகாரி குறிப்பிட்டு சிடி ஸ்கேன் ஆப்பரேட்டர் குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், சிடி ஸ்கேன் ஆபரேட்டர் மருத்துவ அதிகாரியின் பேச்சை அலட்சியம் செய்யும் விதமாக நடந்த கொண்டதாக தெரிகிறது.
மேலும், மருந்து கொடுக்கும் இடங்களில், மருந்து வாங்க வரும் நோயாளிகளிடம் மருத்துவ குறிப்புகளுக்கு மருந்துகளை வழங்கி எப்பொழுது சாப்பிட வேண்டும் என கூறுவது இல்லை. தெரியாமல் கேட்டால் அதற்கு முறையான பதில் வழங்குவதில்லை. மேலும், நேற்று நோயாளி ஒருவருக்கு வழங்கிய மாத்திரை பயன்படுத்த முடியாத நிலையில் பிசுபிசு தன்மையுடன் மாத்திரை இருந்தது. ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனையை நம்பி வரும் பொழுது, இங்கு உள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அலட்சியப் போக்கில் நோயாளிகளிடம் நடந்து கொள்ளக் கூடிய சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நோயாளிகளுக்கு வழங்கும் மாத்திரை காலாவதியான அல்லது பயன்படுத்து முடியாத நிலையில் உள்ளதா என்பதை பார்த்து வினியோகம் செய்ய வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
1
பரமக்குடி மருத்துவமனை சிடி ஸ்கேன் சென்டரில் காத்திருக்கும் நோயாளிகள்.
2. மருத்துவமனை மருந்தகம் பிரிவில் வழங்கப்பட்ட கெட்டுப்போன மாத்திரை.


