நாகர்கோவில், ஜன. 27 –
நாகர்கோவில், புத்தேரி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுக பிள்ளை (48). இவர் அலெக்சாண்டர் பிரஸ் ரோட்டில் திருமண அழைப்பிதழ் கார்டு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடை எதிரில் மீனாட்சி கார்டன் பகுதியை சேர்ந்த நாகராஜன் (58) என்பவரும் திருமண அழைப்பிதழ் கார்டு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர்களுக்கு இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ தினம் ஆறுமுக பிள்ளையிடம் நாகராஜன் தகராறு செய்து கையில் இருந்த சுத்தியலால் நெற்றியில் தாக்கினார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் குவிந்த உடன் ஆறுமுகப்பிள்ளையை மிரட்டி விட்டு நாகராஜன் தப்பி சென்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் ஆறுமுக பிள்ளையை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் நாகராஜன் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


