நாகர்கோவில், மே 27 –
நாகர்கோவில் வடிவீஸ்வரம், அழகம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (40). டூவீலர் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இவர் நண்பர் ராம்ஜி என்பவரிடம் இருந்து ராஜேஷ் குமார் தனது குடும்ப தேவைக்காக பணம் வாங்கி இருந்தார். மேலும் தனது மனைவியின் நகைகளை ராம்ஜி மூலம் வங்கியில் அடகு வைத்து விவசாய கடனையும் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ராஜேஷ் குமார் தனது மனைவியின் நகைகளை மீட்டுத் தருமாறு ராம்ஜி இடம் பணம் கொடுத்துள்ளார். அப்போது ராம்ஜி தனக்கு தரவேண்டிய கடனை முதலில் தர வேண்டும் அதன் பின்னர் தான் தங்க நகைகளை மீட்டு தருவேன் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த தகராறில் ராம்ஜிக்கு ஆதரவாக அவரது உறவினரான ஓட்டல் தொழிலாளி சிவா (32) என்பவர் பேசியுள்ளார். இதனால் ராஜேஷ் குமாருக்கும் சிவாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று சிவா வீட்டுக்கு சென்று ராஜேஷ்குமார் மற்றும் அவருடன் சென்ற சிலர் சிவாவை சரமாரியாக தாக்கினார்கள். இதை தடுக்க வந்த சிவாவின் மனைவி ரம்யாவை அடித்து கீழே தள்ளி உள்ளனர். இதில் காயம் அடைந்த சிவா, ரம்யா ஆகிய இருவரும் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது குறித்து கோட்டர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் காசி, சந்தோஷ், விக்கி, முத்து செல்வம் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


