கன்னியாகுமரி, அக். 13 –
அழகுக்கலை நிபுணர்களின் தொழில் பாதுகாப்பு, தொழில் மேம்பாடு ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டு இயங்கும் சங்கத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பெண்கள் பொருளாதார தற்சார்பு நிலையை அடைதல், பெண்கள் தொழில் முனைவோராகும் வாய்ப்புகளை பெறுதல் என்பவை தனிமனித அளவிலும் சமூக அளவிலும் மிகவும் முக்கியமானது. ஒருங்கிணைக்கப்படாத நிலையில் இருக்கும் அழகுக்கலை போன்ற தொழில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அவற்றின் மேம்பாட்டிற்காக சங்கங்கள் அமைக்கப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது.
மேலும் 2006ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ஊராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிருஷ்ணவேணி. இவர் அப்பகுதியின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்பட்டவர். இன்று சமூக மாற்றத்தை உருவாக்க துடிக்கும் அனைத்து பெண்களுக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார் என அவர் பேசினார்.



