நாகர்கோவில் – நவ- 23,
கன்னியாகுமரி மாவட்டம் சரல் விளையை சேர்ந்த கிறிஸ்டோபர் சோபி பூதப்பாண்டி நீதி மன்றத்தில் வழக்கறிஞராக செயல்பட்டு வந்தார். பூதப்பாண்டி வழக்கறிஞர் சங்க உறுப்பினராகவும் இருந்தார். அண்மையில் சில நபர்களால் எரித்து கொலை செய்யப்பட்டார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும் 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கொலை செய்யப்பட்ட கிறிஸ்டோபர் சோபியின் மனைவி உஷா தேவி இவரது குழந்தைகளை வேலைக்கு சென்று வளர்த்து வரும் நிலையில், தனது கணவரும் படுகொலை செய்யப்பட்டதால் மிகுந்த மனு உளச்சலுக்கு ஆளாக்கப்பட்டதை அறிந்த பூதப்பாண்டி வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் வழக்கறிஞர் பலவேச முத்து அறிவுறுத்தலின் படி சங்க உறுப்பினரான வழக்கறிஞர். பழனி கணபதி அவரது சொந்த பணத்திலிருந்து ரூ.25, 000, வழங்கி அவரது குடும்பத்திற்க்கு ஆறுதல்கள் கூறினார். மேலும் இரு குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி உயர் கல்வி பயிலும் வரையிலும் உண்டான செலவுகளை முற்றிலும் தானே ஏற்றுக் கொள்வதாகவும், மேலும் இந்த வழக்கு சம்மந்தமாக அனைத்து உதவிகளும் எங்களுடைய பூதப்பாண்டி வழக்கறிஞர்கள் சங்கம் மூலமாக அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் எனவும் உறுதி அளித்தார்கள். நிகழ்ச்சியில் பூதப்பாண்டி வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் முருகன், சேக் மைதீன், பாபு, சுதர்சன் மற்றும் வழக்கறிஞர்கள் எஸ்.எம். முத்து, தில்லைநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



