மயிலாடு துறை மாவட்டம் மயிலாடுதுறை கஸ்தூரிபாய் தெருவில் அமைந்துள்ளது மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத 33 அடி உயர சுப்பிரமணியர் கோயில் இந்த கோயில் பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி, காக்கும் பிள்ளையார் கோயில் காவிரி ஆற்றிங்கரையிலிருந்து காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் காவடி பால்குடம் வீதி உலா வந்தது. மேளதாளம் முழங்க வந்த இந்த பால்குடம் காவடி க்கு வீடுகள் தோறும் பக்தர்கள் கற்பூர ஆராத்தி எடுத்து சுப்பிரமணியரை வழிபட்டனர் இந்த பால் குட திருவிழாவில் 100 க்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி கொண்டனர்.



