மயிலாடுதுறை மே 15
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சென்னியநல்லூர் வடபாதி தெருவில் வசிப்பவர் மதியழகன் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது வீட்டின் பின்புறம் புதிதாக ஒரு மகா மாரியம்மன் ஆலயம் கட்டப்பட்டு உள்ளது. அக்கோயிலுக்கு செல்ல மதியழகன் தனது பட்டா இடத்தை வழியாக தந்துள்ளார். அந்த வழியாக கடந்த 5 – வருடமாக கரகம் காவடி, மற்றும் பக்தர்கள் சென்று வந்துள்ளனர்.
கடந்த 10-ந் தேதி அந்த பகுதியை சேர்ந்த நாட்டான்மை மற்றும் மாரிமுத்து, ஆகியோர் தனது நான்கு சக்கர வாகனம் செல்ல வழி வேண்டும் என்று மதியழகன் வீட்டு வேலியை பிடுங்கி எறிந்தனர். (மாரிமுத்துக்கும் மதியழகனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது) இதனை தடுக்க சென்ற அவரது மனைவியை தாக்கி உள்ளனர். கடந்த 12-ந்தேதி கரகம் எடுத்து வரும் போது. ஆரத்தி தட்டுடன் நின்ற மதியழகனை, மாரிமுத்து கருணாநிதி மற்றும் சிலர் தாக்கி விட்டு சுவாமிக்கு ஆராத்தி எடுக்காமல் தடுத்து, உன்னை ஊரை விட்டு ஒதுக்கிவிட்டோம் என கூறி உள்ளனர்.
இது பற்றி தஞ்சை சரக டி.ஐ.ஜி, மற்றும் குத்தாலம் காவல் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ஸ்டாலினிடம் மதியழகன் குடும்பத்தினரோடு வந்து புகார் அளித்துள்ளார்.



