புதுக்கோட்டை மாநகராட்சி, மாலையீடு, கற்பக விநாயகா திருமண மண்டபத்தில், சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், சமூக நலத்துறையின்கீழ், பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை, அமைச்சர் எஸ்.ரகுபதி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் வழங்கினார். உடன், சட்டமன்ற உறுப்பினர்கள் மரு.வை.முத்துராஜா கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன் துணை மேயர் எம்.லியாகத் அலி, மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி.க.ந.கோகுலப்பிரியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.



