தேனி, ஜூலை 04 –
தேனி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித்தேர்வு இன்று (04.07.2026) நடைபெறுவதையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவிக்கையில்: ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு I, இன்று அனைத்து இடங்களிலும் நடைபெறுகிறது.
அதனையொட்டி, தேனி மாவட்டத்தில் 1302 தேர்வர்கள் எழுத விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்றுள்ளனர். இதில் 29 மாற்றுத் திறனாளித்தேர்வர்களும் அடங்குவர். இத்தேர்வு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கக்கூடிய ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வாகும். இத்தேர்வு மாவட்டத்தில் மேரிமாதா மெட்ரிக் மேல்லைப்பள்ளி, சரஸ்வதி நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சரஸ்வதி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பி.சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வினை நடத்த 105 அலுவலர்கள் /ஆசிரியர்கள் நிமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பறக்கும்படைக்குழு நியமிக்கப்பட்டு, தேர்வுமைய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேர்வு மையத்தில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை (05.07.2026) ஆசிரியர் தகுதித்தேர்வு II நடைபெற உள்ளது. இத்தேர்வினை 3512 தேர்வர்கள் 12 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். இத்தேர்வினை நடத்த 260 அலுவலர்கள் / ஆசிரியர்கள் நிமிக்கப்பட்டுள்ளனர். எனவே, தேர்வர்கள் பயன்பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார், இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், மெட்ரிக் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



