தஞ்சாவூர், ஜனவரி 19 –
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இந்திய பன்னாட்டு அமைப்பு அறக்கட்டளை சார்பில் திருபுவனம் அருள்மிகு ஆதிசக்தி சித்தர் ஞான பீடத்தில் நடைபெற்ற மனிதன் சித்தனாக முடியுமா நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் அருள்மிகு ஆதிசக்தி சித்தா ஞானபீட தமிழ் சித்தர் கண்ணன் அடிகள் தலைமை ஏற்றார்கள். மகாலட்சுமி கண்ணன் எழுதிய மனிதன் சித்தனாக முடியுமா நூலினை இலங்கை ஜெயராஜ் வெளியிட தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
விழாவில் ஏழைப் பெண் முழு திருமணச் செலவையும், இரண்டு தையல் இயந்திரங்களும், சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு பொற்காசுகளும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடையும், இந்திய பண்பாட்டு அறக்கட்டளையின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி வழங்கினார்கள்.
நிகழ்வில் தென்காசி ஞான ஆசிரமம் அப்பாஜி சுவாமிகள், சூப்பர் யாத்ரா சையது சாதிக், கோவை தொழிலதிபர் சரவணன், பெங்களூர் தொழிலதிபர் கோவிந்தராஜன், திருபுவனம் பேரூராட்சி தலைவர் அமுதவல்லி கோவிந்தன், பாரத் கல்லூரி புனிதா கணேசன், யோகம் செழியன், வழக்கறிஞர் வைத்தியநாதன், பேச்சாளர் ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம், மென்பொருள் அறிஞர் இன்ஜினியர் ஹரி பிரகாஷ், வடுவூர் பாலசுப்ரமணியம், திருப்பனந்தாள் காசிமட புலவர் பணசை சாமிநாதன், கவிஞர் ராகவ் மகேஷ், பேராசிரியர்கள் கஸ்தூரி நாகராஜன், வனிதா கமல்ராஜ், மருத்துவர் மணிமேகலை ஆகியோர் உரையாற்றினர்.
விழாவில் புலவர் சந்திரசேகரன், ஆடிட்டர் கணேசன், கோவை ராஜேஸ்வரி, செந்துறை உமா மற்றும் கோவிந்தராஜ், கோவை ராஜேஸ்வரி, தஞ்சாவூர் சுந்தரி செழியன், கயிலை மாமனி கலைச்செல்வன், திருவேது குடி பாலதுரையரசன், நந்தி செல்லதுரை, அதம்பை ராமமூர்த்தி, இன்ஜினியர் ராஜேந்திரன் பல்வேறு பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்திய பண்பாட்டு அறக்கட்டளையின் செயலர் ஹரி சங்கீதா வரவேற்புரையும், நிறைவில் பூண்டி புஷ்பம் கல்லூரி பேராசிரியர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். அகில இந்திய வானொலி நிலைய செய்தி வாசிப்பாளர் ஜெய் கீதா ரவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.



