தென்காசி, ஜன. 7 –
தென்காசி மாவட்டம் பாட்டா குறிச்சி கிராமம் கீழப்பாட்டா குறிச்சியில் உள்ள பிரம்மா கோவிலில் வரும் ஏப்ரல் 09 முதல் 12 வரை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சி கிராமம் கீழப்பாட்டாக்குறிச்சியில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் ப்ரம்மலோகம் கோவில் உள்ளது. இத்திருக்கோயில் சத்யம்வதா தர்மம்சரா, அதிதிதேவோபவ போன்ற நமது வேதகால சனாதனக் கொள்கைகளின் அடிப்படையில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரம்மலோகத்தில் கதவுகள் இல்லை, துவாரபாலகர்கள் இல்லை, கதவுகளைத் திறப்பது அல்லது மூடுவது இல்லை. உண்டியல்கள் இல்லை, ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் எந்த வகையான தீண்டாமையும் இல்லை, பணம் அல்லது மதிப்புமிக்க நன்கொடைகள் பிரம்மலோகத்தில் ஏற்றுக் கொள்ளப்படாது.
பிரம்மலோகத்தில் பிரம்மச் செடிகள் மற்றும் மரங்கள், பிரம்ம நவகிரகங்கள், பிரம்ம நாகங்கள், பிரம்ம கணபதி, பிரம்ம வேல்முருகன், பிரம்ம சபரிஜயப்பன், பிரம்ம ஆஞ்சநேயன், பிரம்ம மஹாவிஷ்ணு பிரம்ம மஹாசிவன், பிரம்ம மஹாசரஸ்வதி பிரம்ம மஹாலட்சுமி, பிரம்ம மஹா சக்தி, பரபிம்மமான பஞ்சமுகப்ரம்மா என தெய்வங்களை பூஜிக்கிறோம். ப்ரம்மா திருக்கோவில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்று 9 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் தற்போது 2026 ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி துவக்கபட்டு 12ம் தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஏப்ரல் 9 ஆம் தேதி காலை ஆலயத்தில் உள்ள 15 கும்பங்களுக்கும் தானியங்கள் நிரப்பும் நிகழ்ச்சி நடைபெறும்.
பிரம்மலோகத்தின் 9 வது வருஷாபிஷேகத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருவரையும் விழா நடக்கும் நான்கு நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் ப்ரம்மா திருக்கோவில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் கலந்து கொள்ள அழைக்கிறோம். அதற்கான பணிகள் ஏற்கெனவே டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 9, 10, 11 ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் தொடர்ந்து 4 நாட்கள் அன்னதானம் நடைபெறும்.
எனவே அனைத்து பக்தர்களும் 2026 ஏப்ரல் 9 முதல் 12 வரை நடைபெறும் பிரம்ம லோக பிரம்மோற்சவத்தில் கலந்து கொண்டு எல்லாம் வல்ல பஞ்சமுக பிரம்மாவின் ஆசிகளைப் பெற அன்புடன் அழைக்கிறோம்.
இவ்வாறு பாட்டாக்குறிச்சி பிரம்மா கோவிலின் நிர்வாகி வழக்கறிஞர் ப்ரம்ம ஸ்ரீ கே.கே.சரத் சந்திரபோஸ் மற்றும் பிரம்மா கோவிலின் ஒருங்கிணைப்பாளர் கொட்டாகுளம் இசக்கிப் பாண்டியன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.



