திருவெண்ணெய்நல்லூர், ஜனவரி 21 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே தக்கா கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் மகன் விக்னேஷ் (17). இவர் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த இவரது உறவினரான சுப்பிரமணியன் என்பவர் வயல் அருகில் விக்னேஷ் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது சுப்பிரமணியன் மனைவி பூபதி என்பவருக்கும் விக்னேஷ் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அன்று மாலை 6:00 மணி அளவில் வீரப்பன் வீட்டிற்கும் சுப்பிரமணி வீட்டிற்கும் அடிதடி தகராறு ஏற்பட்டது.
அதில் சுப்பிரமணி மற்றும் அவரது மகன் அஜித் ஆகிய இருவரும் சேர்ந்து விக்னேஷை பலமாக தாக்கி உள்ளார். அதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவெண்ணெய்நல்லூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று, பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு விக்னேஷை பரிசோதனை செய்த மருத்துவர் இறந்து விட்டதாக கூறினர்.
இச்சம்பவம் குறித்து கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் அழகிரி வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளான சுப்பிரமணி மற்றும் அஜித்தை கைது செய்து நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.



