மார்த்தாண்டம், ஜூன் 29 –
திருவட்டாறு அருகே உள்ள செறுவல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன் மகன் நிபின் (30). இவர் கார் ஓட்டுனராக பணிபுரிகிறார். இவர் கடந்த ஜூன் 25ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில் தனது காரில் ஆற்றூரிலிருந்து தேமானூர் ஆற்றுப்பாலம் வழியாக அருமனை நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் ஆற்றுப்பாலத்தின் மேல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் அதே திசையில் வந்த ஒரு இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக நிபின் காரின் இடது பக்க முன் கதவில் மோதி விபத்துக்குள்ளானது.
விசாரணையில் சிதறால் பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவரின் மகன் ஜோஸ் (38) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் செல்போனில் பேசியபடி அஜாக்கிரதையாக ஓட்டி வந்ததே இந்த விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது. காரின் மீது மோதிய வேகத்தில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜோஸ் கீழே விழுந்ததில் அவரது வலது பக்க தலை மற்றும் வலது தோள்பட்டையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவரை உடனடியாக மீட்டு நெய்யாற்றின் கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த கார் ஓட்டுநர் நிபின் அளித்த புகாரின் பேரில் திருவட்டாறு போலீசார் அஜாக்கிரதையாக வாகனத்தை ஒட்டி விபத்து ஏற்படுத்திய ஜோஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


