திருப்பத்தூர், மே 22 –
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கெஜல்நாயக்கன்பட்டி ஜோதி உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். முதலாமிடம் வைத்தீஸ்வரன் 474, இரண்டாம் இடம் சுனில் பாரதி 472, மூன்றாம் இடம் ஜோபியா ஜோ 463 ஆகிய இடத்தினை பெற்றுள்ளனர்.
ஜோதி கல்வி அறக்கட்டளையின் தலைவர் அன்பழகன், செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் மஞ்சுநாதன், ஜோதி கல்வி அறக்கட்டளை உறுப்பினர் கோபிநாதன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் சுகுமார் ஆகியோர் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



