திருவண்ணாமலை, மார்ச் 5 –
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் விளையாட்டு மற்றும் கலைத் திருவிழா அப்பள்ளி விளையாட்டு திடலில் நடைபெற்றது. தலைமையாசிரியை சு.மனோன்மணி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் கு.பாபு, சி.சம்பத், மு.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் உடற்கல்வி இயக்குனர் சவுமியா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் கலந்து கொண்டார். 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ -மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.
5ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயமும், கிரிக்கெட் பால் பந்து எறிதல் போட்டியும், லெமன் ஸ்பூன் போட்டியும் நடந்தது. 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும், குண்டு எறிதல், எறிப்பந்து போட்டிகளும் நடத்தப்பட்டன. இதே போல் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 100 மீட்டர் ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல். எறிப்பந்து, கையுந்து பந்து (வாலிபால்) போன்ற போட்டிகள் நடந்தது.
இது தவிர 5, 8, 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவையும் நடத்தப்பட்டன. முடிவில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கணேஷ் பாபு நன்றி கூறினார். இந்த விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி, உடற்கல்வி, இடைநிலை, ஓவிய ஆசிரியர்களும், பகுதி நேர ஆசிரியர்களும், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



