திருப்பத்தூர், ஆக. 25:
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் தமிழ்த்துறை வீரமாமுனிவர் தமிழ் மன்றம் சார்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் துறை மாணவர் யோகேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். அருட்தந்தை முனைவர் தியோபில் ஆனந்த் ஆசியுரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் (சுழற்சி-2) முனைவர் ம. சரளாதேவி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கல்லூரியின் முன்னாள் மாணவரும், அரசு ஆடவர் கலைக் கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வாளருமான ரஜினி, ‘நாலும் இரண்டும் அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியை வீரமாமுனிவர் தமிழ் மன்றத் தலைவர் இரா. இராஜா மற்றும் உதவிப் பேராசிரியர்கள் முனைவர் கோ. கமலா, முனைவர் ச. மணிமேகலை ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் இருபால் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் துறை மாணவி பிரிசில்லா தொகுத்து வழங்கினார். நிறைவில் ஆங்கிலத் துறை மாணவர் சாவியோ ராகுல் ராஜ் நன்றியுரை வழங்கினார்.



