திருப்பூர், பிப். 27 –
திருப்பூர் காலேஜ் ரோடு 29 வது வார்டு பகுதி தமிழகத்தில் அதிக பெண்கள் படிக்கும் ஜெய் வ பாய் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு அதிக மாணவிகள் செல்லும் பகுதியான காலேஜ் ரோடு ஒற்றைக்கண் பாலத்தில் சாக்கடை கால்வாய் நீர் தூர்வாரப்படாமல் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் தினம்தோறும் முகம் சுளித்தவாறு சென்று வருகிறார்கள்.
இதை பலமுறை 29 வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் சின்னச்சாமி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் அமித் அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் திமுக மேயர் தினேஷ்குமார்.
அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சாக்கடை நீரை தூர்வாரப்படுமா என ஆதங்கப்பட்டு வருகின்றனர்.



