தருமபுரி உழவர் சந்தையில்வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர் / முதன்மை செயலாளர் ஜி.பிரகாஷ் அவர்கள் திடீர் ஆய்வு மோற்கொண்டார். ஆய்வின்போது காய்கறிகள், தோங்காய், கீரைகள், மரவள்ளி, நெல்லிகாய் மற்றும் மகளீர் சுயஉதவி குழுக்கள் விலை நிர்ணையம் மற்றும் விவசாயிகளின் இலாபம் பற்றி கேட்டறிந்தார். நூகர்வேரிடம் வெளிசந்தை விட குறைவான விலையில் விற்பனை செய்யபடுகிறதா என்பதை கேட்டறிந்தார். மேலும் கூடுதல் கடை ஒதுக்கிடு செய்துதருதல் மற்றும் வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் அதிக கூட்ட நெரிசலின் போது திருட்டு போன்ற குற்ற செயல்களை தவிர்க்க உடனடியாக கண்காணிப்பு கேமரா பெருத்துமாறு உத்தரவிட்டார். மேலும் உழவர் சந்தைக்கு காய்கறிகள், பழங்கள் வரத்தினை அதிகரிக்கவும் சிறப்பான செயல்பாடுகளை தொடருமாறு கூறினார். வேளாண் துணை இயக்குநர் இளங்கோவன், வேளாண் விற்பனை குழு செயலாளர் ரவி ,உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன், உதவி வேளாண்மை அலுவலர் உடனிருந்தனர்.



