தருமபுரி, ஜூலை 28 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதியன் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாட்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல துறையின் சார்பில் மாற்று திறனாளிகளுக்கு காண உபகரணங்களை ஆட்சியர் வழங்கினார்.
மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தருமபுரி பிரிவு விளையாட்டு விடுதி மாணவிகள் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்ற விளையாட்டு மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று காண்பித்து வாழ்த்து பெற்றனர். தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் மதுமதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



