தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆய்வு மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
ஆய்வின்போது அத்தியாவசிய மான உயிர் காக்கும் உபகரங்களா ன தானியங்கி ஏற்றி, மடக்கக்கூடிய ஸ்ட்ரசர் படுக்கை, முதுகு தண்டு பலகை ,முதுகு தண்டு பலகை பட்டைகள் ,சககரநாற்காலி, ஊசி மற்றும் சிரிஞ்ச் அழிப்பான், ஊசி முனை வெட்டு கருவி, இதயத் துடிப்பு கேட்ப கருவி, பெரியவர், குழந்தைகளுக்கான ஆக்சிஜன், டிஜிட்டல் வெப்பமானி, ரத்தசக்க ரை அளவிட்டு கருவி உள்ளிட்ட உப கரணங்கள் உள்ளனவா என்ப து குறித்து ஆய்வு செய்யப்பட்டது
மேலும் தஞ்சாவூர் மற்றும் கும்ப கோணம் பகுதியில் உள்ள 31 தனி யார் மருத்துவமனைகளை சேர்ந்த 37 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன, இவற்றில் 34 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உரிய உபகரணங்களுடன் இருந்தன மீதம் உள்ள 3 ஆம்புலன்ஸ் வாகன ங்கள் உரிய உபகரணங்களை பொருத்தி மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டது
ஆய்வின்போது கோட்டாட்சியர் நித்யா, சுகாதார இணை ஆணை யர் முருகப்பன், வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் ஆடலழகன், கூடுதல் துணை காவல் கண்காணி ப்பாளர் பாரதிதாசன், இன்ஸ்பெக் டர் எம் ஜி ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆய்வுமாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது



