ராமநாதபுரம், செப். 3 –
தொண்டி செய்யது முகம்மது அரசு மேல்நிலைப் பள்ளியின் தூதுவராக பள்ளியின் முன்னாள் மாணவரும் கல்வி நிறுவனங்களின் தாளாளர் பொறியாளர் எம்.எம். அபூபக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கல்வி சேவைக்காக தன்னை அர்ப்பனித்து பல சாதனை மாணவர்களை உருவாக்கி வரும் கல்வி சேவையாளர் எம்.எம். அபுபக்கர் சேவையை பலரும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தொண்டி செய்யது முகமது அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உறுப்பினர்களுடைய கூட்டம் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஹமிது பாத்திமா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி மாணவர்கள் நலன் கருதி தொண்டி செய்யது முகமது அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் சரிவர இல்லாமல் ஆடுமாடுகள் சுற்றும் நிலை உள்ளது. மாணவர்கள் நலன் கருதி சுற்றுச்சுவரை கட்டித் தர வேண்டும்.
செய்யது முகமது அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுமார் 12 ஏக்கர் நிலம் விளையாட்டு மைதானம் உள்ளது. பராமரிப்பதற்கு கண்காணிப்பதற்கு பள்ளிக்கு காவலாளி இல்லை அரசு கவனம் செலுத்தி பணியாளர் நியமனம் செய்து தர வேண்டும். மாணவர்கள் நலன் கருதி புதிய கழிப்பறை கட்டப்பட்டு பூட்டியே இருக்கும் நிலை உள்ளது. அதை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் நிரந்தர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கியமாக தொண்டி செய்யது முகமது அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தூதுவராக இப்பள்ளியின் முன்னாள் மாணவரும் பல கல்வி நிறுவனங்களின் தாளாளருமான பொறியாளர் எம்.எம். அபூபக்கர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டு பள்ளி கல்வித் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். பள்ளி முன்னாள் மாணவர் தொண்டி சாதிக் பாட்சா தொண்டி பேரூராட்சி கவுன்சிலர் பெரியசாமி, கவுன்சிலர் மகஜபின் சல்மா ஆசிக், ரம்யா உள்ளிட்ட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட பள்ளி தூதுவர் பொறியாளர் அபுபக்கருக்கு பாராட்டுதல் மற்றும் வாழ்த்துக்கள் கூறினர். தலைமையாசிரியர் அருள் பிரகாசம் நன்றி கூறினார்.



