ராமநாதபுரம், அக். 4 –
ராமநாதபுரத்தில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் துறை சார்பில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியை அமைச்சர் காந்தி துவக்கி வைத்து, 25 நெசவாளர் பயனாளர்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கினார். கைத்தறி, துணி நூல் துறை அமைச்சர் காந்தி குத்துவிளக்கேற்றி வைத்து, கைத்தறி கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதில் கைத்தறி, கைத்திறன், துணிநூல், கதர்த் துறை அரசு செயலர் அமுதவல்லி, கைத்தறித்துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி), ராம.கருமாணிக்கம் (திருவாடானை) முன்னிலை வகித்தனர்.
இக்கண்காட்சியில் 60க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நெசவாளர்களின் தயாரிப்புகளும் இடம் பெற்றன.
ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், கைத்தறித்துறை கூடுதல் இயக்குநர் தமிழரசி, கைத்தறித்துறை இணை இயக்குநர்கள் கணேசன், மாதேஸ்வரன், உதவி இயக்குநர் சேரன், கண்காணிப்பு அலுவலர் ரெத்தினபாண்டி, கைத்தறி துறை ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



