திருச்சி, ஏப்ரல் 27-
திருச்சி மாவட்டம் லால்குடி ஜெஜெ நகர் பகுதியைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் கண்ணன், குடும்பப் பிரச்சனையால் மனமுடைந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு லால்குடி ரயில்வே கேட் தண்டவாளத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


