By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஜித்குமார் கொலை வழக்கில் மிளகாய்ப்பொடி வாங்கிய கடை முதல் அரசினர் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ அதிகாரிகள் துரித விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > அஜித்குமார் கொலை வழக்கில் மிளகாய்ப்பொடி வாங்கிய கடை முதல் அரசினர் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ அதிகாரிகள் துரித விசாரணை
சிவகங்கை

அஜித்குமார் கொலை வழக்கில் மிளகாய்ப்பொடி வாங்கிய கடை முதல் அரசினர் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ அதிகாரிகள் துரித விசாரணை

Last updated: August 7, 2025 7:30 pm
August 7, 2025
34 Views
Share
SHARE

திருப்புவனம், ஆக. 07 –

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் அஜித்குமார் கண்களில் தூவப்பட்ட மிளகாய்ப்பொடி வாங்கிய கடை மற்றும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் அரசினர் விடுதி ஆகிய பகுதிகளில் சி.பி.ஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் திருட்டு வழக்கு விசாரனைக்காக அழைத்து செல்லப்பட்டு தனிப்படை காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டதுடன் சி.பி.ஐ யிடம் ஒப்படைக்கப்பட்டு கடந்த ஜூலை 12-ம் தேதி சி.பி.ஐ எஸ்.பி ரஜ்பீர் சிங் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ததுடன் டி.எஸ்.பி மோஹித்குமார் தலைமையிலான குழுவினர் கடந்த ஜூலை 14-ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில் முதலாவதாக அஜித்குமார் தாக்கப்பட்ட இடம் மற்றும் கோவில் ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதுடன் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றினர். மேலும் கடந்த 5-ம் தேதி கைதான ராஜா, பிரபு, கண்ணன், ஆனந்த், சங்கர மணிகண்டன் உள்ளிட்ட 5 காவலர்களை சிபிஐ கஸ்டடியில் எடுத்து 23 மணி நேரம் விசாரணை முடித்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

அதனைத் தொடர்ந்து விசாரணையின் போது காவலர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மீண்டும் மடப்புரம் வந்த சி.பி.ஐ அதிகாரிகள் அஜித்குமார் கண்களில் மிளகாய்ப்பொடி தூவியதாக கூறப்படும் நிலையில் மிளகாய்ப்பொடி வாங்கிய கடை மற்றும் அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் அரசினர் மாணவர் விடுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் விடுதி காவலாளி மற்றும் அப்பகுதியில் கடை நடத்தி வருபவர்களிடம் விசாரணை மேற்கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் புளியந்தோப்பு பகுதிக்குள் நுழையும் பகுதியில் உள்ள மற்றொரு தோப்பு மற்றும் அப்பகுதியில் அஜித்குமாருக்கு உணவு வாங்கி கொடுத்த உணவகம் ஆகிய பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறைதீர்க்கும் நாள்
நாட்டரசன்கோட்டை அருகே தெருவில் மழைநீர் தேங்குவதால் நோய்த் தொற்று அபாயம்; பொது மக்கள் புகார்
அஜித் குமார் கொலையில் முக்கிய சாட்சியாளரின் வீட்டிற்கு அலாரத்துடன் கூடிய டோர் பெல் மற்றும் கதவிற்குள் ரகசிய லென்ஸ் பொருத்தப்பட்டது
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
இலைப் பேனின் அறிகுறிகள் பற்றி விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

மானாமதுரை தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்

May 22, 2025
35 Views
அராஜகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்
விவசாயிகளுக்கு விழ்ச்சி படை புளூ உயிரியல் தடுப்பு முறை குறித்து செயல் விளக்கம்
உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account