கிருஷ்ணகிரி, டிச.21- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் தெற்கு ஒன்றிய திமுக கட்சி சார்பில் ஜெகதேவியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் ஆலோசனைப்படி அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித் ஷாவை கண்டித்தும் உடனடியாக அவர் பதவி விலக வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெகதேவி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பர்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அறிஞர் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே.கே.கிருபாகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி.நாகராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுமார் 200க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். ஒன்றிய துணை செயலாளர் சுரேஷ், ராஜி (எ) ராஜதுரை, மீனாட்சி தங்கமணி, ஒன்றிய பொருளாளர் குப்புசாமி, மாவட்ட பிரதிநிதிகளான பெரியண்ணன், கிருஷ்ணன், வெங்கடசாமி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் லட்சுமி பிரியா, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பாலாஜி, மாவட்டத் துணை அமைப்பாளர்களான ரூபேஷ், மதியழகன், கண்ணையன், ராதாகிருஷ்ணன், அண்ணாதுரை, மற்றும் திமுக சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நகரச் செயலாளர் கோடாரி வளவன், ஒன்றிய செயலாளர் த.மாதையன், ராஜேஷ், இளையராஜா, சிறுத்தை பெருமாள், உள்பட பலர் கலந்து கொண் டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அம்பேத்கரின் உருவ படத்தை கைகளில் ஏந்தியவாறு கண்டன கோஷங்கள் எழுப் பினார்கள்.



