நாகர்கோவில் ஜூன் 15
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வழி மண்டல மேலடுக்கு சுழற்ச்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளது: இந்நிலையில் குமரி மாவட்ட கடல் பகுதிகளில் கடந்த 11 ஆம் தேதி முதல் நேற்று 14ம் தேதி இரவு வரை கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, சூறை காற்று அதிகமாக இருக்கும் என்பதால் கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்களும், சுற்றுலா பயணிகளும் செல்ல வேண்டாம் என தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுவித்து உள்ளது . மீனவர்கள் தேவையான முன்னெச்சரிகைகளை மேற் கொள்ள வேண்டும் என குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில் குளச்சல், தேங்காய்பட்டிணம் உள்ளிட்ட மீன் பிடி துறைமுகங்களில் இருந்து நாட்டு படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை படகுகள் மற்றும் மீன் பிடி உபகரங்கள் பாதுகாப்பாக கரை ஒதுக்கபட்டு உள்ளன.



